இந்தியா வந்தார் ஏசு? தயாராகிறது சினிமா
இந்தியாவிலும் ஏசு இருந்ததாக சித்தரித்து, புதிதாக தயாராகிறது ஹாலிவுட் சினிமா. ஏசுவின் 13வது வயது முதல் 30 வயது வரை, அவரைப் பற்றி பெரியளவில் தகவல்கள் இல்லை. இந்த வயதில் ஏசு எங்கிருந்தார் என்பதை ஆராய்ந்து, அவர் இந்தியாவின், மத்திய கிழக்கு பகுதியில் இருந்ததாக சித்தரித்து இந்த புதிய சினிமா தயாராகி வருகிறது. மத்திய கிழக்குப் பகுதியில், புத்த மடங்களில் ஏசு தங்கியிருந்ததாகவும், ஜாதிக் கொடுமைக்கு எதிராக போதனைகள் செய்ததாகவும் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன. “அக்வேரியன் கோஸ்பெல்’ என்ற பெயரில் இந்த சினிமா திரையிடப்பட உள்ளது. படத்தின் தலைப்பு, முந்தைய நுõற்றாண்டின் ஆராய்ச்சிப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி புத்தகத்தில்தான், இந்தியாவிலும் ஏசு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், ஏசு புனிதராகவும், இந்தியாவின் கிழக்கத்திய மத முறைகளில் ஈடுபாடு கொண்டவராகவும் சித்தரிக்கப்படுகிறது. ஏசு இங்கு வந்த போது, அப்போதைய அராமிய மொழியில், ஏசுவா என்று அழைக்கப் பட்டதாகவும், இந்தியாவின் மத்திய கிழக்கு பகுதியில் பல இடங்களுக்கு அவர் சென்று வந்ததாகவும் இந்த சினிமாவில் விவரிக்கப் பட்டுள்ளது.