கொழும்பில் கடத்தப்பட்டவர் நீர்கொழும்பில் விடுவிப்பு…!!
Read Time:48 Second
கொழும்பு – 2 பகுதியில் கடத்தப்பட்ட ஒருவர் நீர்கொழும்பு பகுதியில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
வேனில் வந்த இனந்தெரியாத நால்வராலேயே இவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இவரைக் கடத்திச் சென்றுள்ளதோடு, பின்னர் கடத்தல்காரர்களால் அவர் நீர் கொழும்பு பகுதியில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating