ஆழ்வார்பேட்டை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு…!!
Read Time:50 Second
மயிலாப்பூரை சேர்ந்தவர் சுதா (வயது 35). இவர் ஆழ்வார்பேட்டை சி.பி.ராம சாமி சாலையில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த வாலிபர் சுதா அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துச் சென்று விட்டார்.
இதே போல் அதே பகுதியில் சென்ற ராஜசேகர் என்பவரிடம் மர்மநபர் செல்போனை பறித்துச் சென்றுவிட்டார். இந்த 2 சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating