வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை: கணவர்–மாமியார் மீது புகார்..!!
நிலக்கோட்டை அருகே உள்ள கல்லடிபட்டியை சேர்ந்தவர் கவுரி(வயது32). இவருக்கும் மதுரை அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்த சார்லஸ்(35) என்பவருக்கும் கடந்த 2013–ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது வரதட்சணையாக 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொடுக்கப்பட்டன.
திருமணமான சில மாதங்களிலேயே மேலும் வரதட்சணை வாங்கி வருமாறு சார்லஸ் மனைவியை வலியுறுத்தி வந்தார். கவுரி தனது வீட்டின் நிலைமையை எடுத்துக்கூறி மேற்கொண்டு பணம் வாங்கி வர இயலாது என தெரிவித்தார். எனினும் சார்லஸ் அதனை கேட்கவில்லை. அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் வேலைக்கு சேர்வதற்கு ரூ.2 லட்சம் பணம் வேண்டும். அதை நீதான் வாங்கிவரவேண்டும் என்று தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.
இதற்கு அவரது தாய் பவுன்மேரி, தங்கைகள் ராணி, ஜெனிதா, தம்பி ஸ்டீபன்ராஜ் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
பணம் வாங்கிவரவில்லை என்றால் மண்எண்ணை ஊற்றி எரித்து கொன்று விடுவதாகவும், வேறு திருமணம் செய்து கொள்போவதாகவும் சார்லஸ் மிரட்டியுள்ளார். இதனால் மனம் பாதிக்கப்பட்ட கவுரி பெற்றோர் வீட்டுக்கு வந்தார். கணவர் வீட்டார் செய்த வரதட்சணை கொடுமை குறித்து நிலக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் முருகேஷ்வரி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating