அடையாறு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களின் உடல் மீட்கப்பட்டது..!!

Read Time:1 Minute, 27 Second

1348af45-d267-4313-9f88-efd5cf795d4f_S_secvpfசென்னை எம்.ஜி.ஆர். நகரில் சூளைப்பள்ளம் பகுதியில் கடந்த 26–ந்தேதி அன்று ஆறுமுகம், கார்த்திக் ஆகிய 2 மாணவர்கள் அடையாறு ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அசோக் நகர் போலீஸ் உதவி கமிஷனர் ஆறுமுகம், எம்.ஜி.ஆர்.நகர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் மாணவர்களை தேடிக் கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 3 நாட்களாக தீயணைப்பு படை வீரர்கள் அடையாறு ஆற்றில் குதித்து மாணவர்களை தேடி வந்தனர்.

மாணவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்நிலையில் மாணவர் கார்த்திக்கின் உடல் கோட்டூர்புரம் பகுதியிலும், ஆறுமுகத்தின் உடல் அடையாறு பகுதியிலும் மீட்கப்பட்டது. அடையாறு ஆற்றங்கரையிலேயே 2 பேரின் உடல்களும் ஒதுங்கி கிடந்தது.

மீட்கப்பட்ட 2 பேரின் உடல்களையும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்த பின்னர் போலீசார் உறவினர்களிடம் ஒப்படைப்படைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகுராணி போட்டியில் சிறைக்கைதிகள்…!!
Next post கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரி வந்த பெண்களால் பரபரப்பு..!!