சக கல்லூரி மாணவியை மிரட்டி 6 மாதமாக கற்பழித்தவன் கைது…!!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சக கல்லூரி மாணவியை மிரட்டி கற்பழித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
மும்பையின் தராவியைச் சேர்ந்த இருவரும் புறநகர் பகுதியான பந்த்ராவில் உள்ள கல்லூரியில் ஒன்றாக படித்து வந்துள்ளனர். ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பழகி வந்துள்ளனர். சில நாட்கள் கழித்து அவன் அந்த கல்லூரி மாணவியிடம் சில போட்டோக்களை காட்டி தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளான். இல்லையெனில் அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.
இதற்கு பயந்து அந்த மாணவி அவது மிரட்டலுக்கு அடிபணிந்துள்ளார். இதைபயன்படுத்தி கடந்த 6 மாதங்களாக மிரட்டியே அந்த மாணவியை கற்பழித்துள்ளார். அவனது கொடுமை எல்லை மீறிப்போகவே அந்த மாணவி பெற்றோரிடம் நடந்த கொடுமையை கூறியுள்ளார். அவர்கள் போலீசல் புகார் அளிக்க, போலீசார் அந்த மாணவனை கைது செய்தனர்.
அவன் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating