சிறுமி துஷ்பிரயோகம் – இருமுறை திருமணமான ஒருவர் கைது…!!
12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 43 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேகநபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் நெருங்கிய உறவினர் எனவும் ஒரே ஊரில் வசித்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் அவர் இருமுறை விவாகமானவர் என்பதோடு முதலாவது திருமணத்தின் மூலம் 19 வயது மகனும் இரண்டாவது திருமணத்தின் மூலம் 1 1/2 வயது பிள்ளையும் உள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த 27ம் திகதி சிறுமி தனியாக இருந்த வேளையில் வீட்டுக்குள் நுழைந்த சந்தேகநபர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதேவேளை குற்றம்சாட்டப்பட்டவர் தமது உறவினர் என்பதால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பொலிஸில் முறையிட தாமதமாகியுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும் நேற்றையதினம் (29) சிறுமியின் தாய் முறைப்பாடு செய்துள்ளதோடு, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபரை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை நவகத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating