யாழ்.வர்த்தக நிலையத்தில் தீவிபத்து..!!
Read Time:57 Second
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மீசாலை A9 வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது வர்த்தக நிலையத்தில் காணப்பட்ட 5 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மீதிப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating