மக்களை பித்துபிடித்து அலையவிட்ட பச்சை நிற பறக்கும் தட்டு…!!
Read Time:1 Minute, 21 Second
ஐம்பதுகளின் சினிமாக்களில் காண்பிக்கப்பட்ட பறக்கும் தட்டைப் போல, பச்சை ஒளி மின்ன தென் ஆப்பிரிக்க வானத்தில் தோன்றியது என்னவென்று தெரியாமல் கேப் டவுன்வாசிகள் கலங்கிப்போயினர்.
ஊடகங்களில் மாபெரும் செய்தியாகிப் போன இது, ஏலியன்களின் வருகைக்கான குறியீடோ என்ற பார்வையில் பலரையும் பீதியடையச் செய்தது. ஏலியன் பற்றிய செய்திகளைப் பரப்பிவரும் ‘யு.எஃப்.ஓ. சைட்டிங்ஸ் டெய்லி’ இந்த வடிவத்தைப் பார்க்கும்போது பறக்கும் தட்டுதான் என நம்பிக்கையாக குறிப்பிட்டது.
பீதியில் அனைவரும் பரிதவித்து வந்த வேளையில் மூன்று ஆண்டுக்கு முன்பு இதேபோல ஒன்று கேப் டவுன் பகுதியின் வானத்தில் உலவியதாக மேற்கொண்டு சமூக வலைதளப்பக்கங்களில் செய்திகள் பரவின.
கடைசியாக சிலர் இது ஆளிள்ளாத சிறிய ரக விமானமாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating