சமூக வலைதளங்களில் வைரலாகிப்போன சாண்டாவுடன் தூங்கும் குழந்தை போட்டோ…!!
கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட்டமாக்கும் சாண்டா கிளாஸ்கள், குழந்தைகளின் நாயகனாக மேற்கத்திய நாடுகளில் மதிக்கப்படுகின்றனர்.
இங்கு, பெற்றோர்கள் பெரிய மால்களில் வரிசையில் காத்திருந்து சாண்டாவின் மடியில் தமது குழந்தைகளை உட்கார வைத்து படமெடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுபோல, தமது ஆறு மாத குழந்தையான ஸேக் வால்டர்ஸை சாண்டாவுடன் படமெடுப்பதற்காக இண்டியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
வரிசையில், சாண்டாவை நெருங்குவதற்குள் ஸேக் தூங்கிப்போனான். அவனை எழுப்பி சாண்டாவுடன் படமெடுக்க வைக்கலாமா? என பெற்றோர் யோசித்த வேளையில், சாண்டா கிளாஸாக வேடமிட்டிருந்த கிறிஸ் கிரிங்ல் குழந்தையை எழுப்பாமல், தன்னுடன் தூங்குவதுபோல படமெடுத்துக் கொள்ளலாம் என யோசனை கூறினார்.
ஸேக்கின் பெற்றோர்கள் சாண்டாவுடனான தங்களது அனுபவத்தை புகைப்படத்துடன் தமது சமூக வலைதளப்பக்கத்தில் சில தினங்களுக்கு முன் பகிர்ந்தனர். மழலையாக இருவரும் தூங்கும் இந்தப் புகைப்படம் பேஸ்க்கில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் பேரால் இதுவரை பகிரப்பட்டுள்ளது.
Average Rating