காக்களூர் ஏரியில் சாக்குப்பையில் கட்டி குழந்தை உடல் வீச்சு: நகைக்காக கடத்தி கொலையா?

Read Time:1 Minute, 33 Second

64d65656-a034-4213-bfe1-6c22a626a550_S_secvpfதிருவள்ளூரை அடுத்த காக்களூர் ஏரியில் கட்டப்பட்ட சிமெண்டு சாக்கு பை கிடந்தது. அதனை மீன்கள் துளையிட்டு கடித்து கொண்டு இருந்தன. அப்பகுதியில் துர்நாற்றமும் வீசியது.

இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அவ்வழியே சென்றவர்கள் திருவள்ளூர் தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாக்குப்பையை மீட்டு பிரித்து பார்த்தனர்.

அதில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை உடல் அழுகிய நிலையில் இருந்தது. மீன்கள் கடித்ததில் சதைகள் பிய்ந்து காணப்பட்டது.

பிணமாக கிடந்த குழந்தை யார்? பெற்றோர் குறித்த விபரம் தெரியவில்லை. நகைக்கு ஆசைப்பட்டு குழந்தையை யாரேனும் கடத்தி கொன்று இங்கு வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மாயமான குழந்தைகள் பற்றிய விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வந்தவாசி வாலிபர் மலேசியாவில் மர்ம சாவு: குடும்பத்தினர் புகார்…!!
Next post மீன்சுருட்டி அருகே சாலையோர பள்ளத்தில் பாய்ந்த அரசு விரைவு பஸ்–3 பேர் காயம்…!!