ரஷ்யாவின் இளம் எம்.பி.யை குண்டை வெடிக்கவைத்து கொன்று தற்கொலை செய்த கணவர், வல்லுறவில் ஈடுபட்டிருந்தார்…!!
ரஷ்யாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரான ஒக்ஸனா பொப்ரோவ்ஸ்கயாவும் அவரின் கணவரும் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டபோது ஒக்ஸனாவை அவரின் கணவர் வல்லுறவுக்குட்படுத்திக் கொண்டிருந்திருந்தார் என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
30 வயதான ரஷ்ய எம்.பி. ஒக்ஸனா பொப்ரோவ்ஸ்கயாவும் 28 வயதான அவரின் கணவர் நிகிட்டா பொப்ரோவ்ஸ்கியும் ரஷ்யாவின் சைபீரிய பிராந்திய நகரான நோவோஸ்பிரிஸ்கில் கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து அவர்களின் வாகனத்திலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டனர்.
இவர்கள் இருவரினதும் சடலங்கள் வாகனத்துக்குள் அரைநிர்வாண நிலையில் காணப்பட்டன.
குண்டுவெடித்தபோது இவர்கள் பாலியல் உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்திருக்கலாம் என முன்னர் கருதப்பட்டது.
ஆனால், தனக்கு துரோகம் இழைத்ததாக கருதப்பட்ட மனைவி ஒக்ஸனாவை அவரின் கணவர் நிகிட்டா பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியிருக்கலாம் என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஐக்கிய ரஷ்யா கட்சியை சேர்ந்தவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒக்ஸனா பொப்ரோவ்கயா. கவர்ச்சியான தோற்றம் கொண்ட அவர் தனது குடும்பத்தினரதும் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.
ஆனால், நிகிட்டாவுக்கும் ஒக்ஸனாவுக்கும் இடையிலான குடும்ப வாழ்வில் சர்ச்சை ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
செல்வந்தர் ஒருவருடன் ஒக்ஸனாவுக்கு பாலியல் தொடர்பு இருப்பதாக நிகிட்டா குற்றம் சுமத்தி வந்தார்.
இந்நிலையிலேயே கடந்த வியாழக்கிழமை நோவோஸ்பிரிஸ்க் நகரில் தமது காரில் வைத்து, தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு ஒக்ஸனாவை நிர்ப்பந்தித்துவிட்டு கிரனேட்டை வெடிக்க வைத்து தான் நிகிட்டா தற்கொலை செய்துகொண்டதுடன் தனது மனைவியைக் கொலை செய்ய திட்டமிட்டிருக்கலாம் என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Average Rating