வாழி! வாழி!! கொடுங்கோலாய் வாழி!!!
Read Time:29 Second
கொலை வெறியின் குரு – நீ
பாசிசத்தின் பாடுபொருள் — நீ
அராஐகத்தின் அவதாரம் — நீ
அட்டூழியத்தின் அதிபதி – நீ
அடக்குமறையின் அரசன் — நீ
ஆணவத்தின் அரங்கம் — நீ
பொய்மையின் பிறப்பிடம் — நீ
நயவஞ்சகத்தின் நாயகனே – நீ…
தலையாட்ட நம் தேசம் உள்ளவரை
தேசியத்தின் தலைவனும் – நீ
வாழி! வாழி!! வாழியவே!!!
—திருமதி.நிர்மலா.