துருக்கி: இஸ்லாமிய உறைவிடப் பள்ளியில் தீவிபத்து: 6 சிறுவர்கள் உடல் கருகி பலி..!!

Read Time:1 Minute, 33 Second

5b7bb8e6-0c2c-4903-8b9a-30d280ef2e0f_S_secvpfதென்கிழக்கு துருக்கியில் உள்ள இஸ்லாமிய உறைவிடப் பள்ளியில் இரவு வேளையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கிய 6 சிறுவர்கள் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

இங்குள்ள டியார்பகிர் மாகாணத்தில் குர்ஆன் தொடர்புடைய இஸ்லாமிய மார்க்க கல்வியை போதிக்கும் உறைவிடப் பள்ளி ஒன்றுள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் மாணவர்கள் அனைவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தபோது மின்கசிவு காரணமாக இங்குள்ள படுக்கைக் கூடம் பகுதியில் திடீரென தீபற்றியது.

பதறியடித்து, விழித்த மாணவர்களில் பலர் ஜன்னல்களின் வழியாக வெளியே குதித்து, தப்பியோடி உயிர் பிழைத்தனர். தப்பியோட வழியின்றி உள்ளே சிக்கிக் கொண்ட ஆறு மாணவர்கள் தீயில் சிக்கி, உடல் கருகி, பரிதாபமாக உயிரிழந்தனர். அந்தக் கூடத்தில் சூழ்ந்த புகையில் சிக்கி மூச்சுத்திணறிய மூன்று மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காரில் குண்டு வெடித்து, ரஷிய பெண் எம்.பி. கணவருடன் பலி…!!
Next post மோடி அரசு என்னுடன் நேருக்குநேர் மோதட்டும்: வருமான வரித்துறை சோதனை பற்றி ப.சிதம்பரம் கருத்து…!!