பிரித்தானிய இளவரசர் ஹரியின் பிரிவை தாங்க முடியாமல் அழுத நான்கு வயது ரசிகை…!!
தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி, அங்கு தனது நான்கு வயது ரசிகையை சந்தித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் மிக ஏழ்மையான நகரமான Khayelitsha- வில் அதிக கொலை குற்றங்கள் நடைபெறும்.
இப்பகுதியில் தினந்தோறும் ஒரு கொலையாவது நடப்பதற்கு வாய்ப்புள்ளது என பொலிசாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று தனது நேரத்தினை செலவிட்டு வரும் இளவரசர் ஹரி, இன்று Khayelitsha நகரி உள்ள கால்பந்து மையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு இளம்வயதினர் மற்றும் சிறு குழந்தைகளுடன் கால்பந்து விளையாடிய ஹரி, தனது 4 வயது ரசிகையை சந்தித்துள்ளார், Sinentlantla Jacobs(4) என்ற அச்சிறுமி, ஹரியின் கைகளை இறுகபற்றிக்கொண்டு சந்தோஷமாக துள்ளி குதித்து விளையாடியுள்ளார்.
அச்சிறுமியுடன் சிறிது நேரத்தை செலவிட்ட ஹரி, பின்னர் பிரிந்துசெல்லும்போது, அச்சிறுமி தேம்பி தேம்பி அழுதுள்ளார்.
இந்த கால்பந்து மையம், இளைஞர்களை ஊக்குவித்தல், எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு போன்ற செயல்களை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating