வடக்கு தவிர்ந்த அனைத்து பாடசாலைகளுக்கும் 4ம் திகதி பூட்டு…!!
Read Time:1 Minute, 15 Second
அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்கத்தின் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக டிசம்பர் 4ம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஜனவரி 5ம் திகதி முதலாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் மீளத் திறக்கப்படவுள்ளன.
இதேவேளை வட மாகாணத்திலுள்ள பாடசாலைகள் மாத்திரம் டிசம்பர் 5ம் திகதி மூடப்படும் என வடமாகாண கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவனுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கடந்த 27ம் திகதி வடக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது.
இதற்கான பதில் பாடசாலை நாளாக டிசம்பர் 5ம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating