கருச்சிதைவினால் பெண் மரணம்: ஆயுர்வேத வைத்தியர் கைது!!
Read Time:1 Minute, 21 Second
பாணந்துறையில் ஹிரனவைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியரொருவரிடம் கருச்சிதைவு செய்து கொண்ட பெண்ணொருவர் திடீரென மரணமாகியதால் ஆயுர்வேத வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை நீதவான் ஜகத்த கஹாண்டகமகே உத்தரவிட்டுள்ளார். கோட்டே மாதிவெலவைச் சேர்ந்த 22வயதான கஸ்தூரி ஜயவதி என்ற யுவதியே கருச்சிதைவினால் மரணமானவராவார். ஆபத்தான நிலையில், பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த கஸ்தூரி ஜயவதி பின்னர் மரணமாகியுள்ளார். இவரது மரணத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவ்யுவதியின் மரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தகவல்களை மரணமான யுவதியின் தாயார் மூலமே பொலிஸார் பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையிலேயே குறி;த்த ஆயுர்வேத வைத்தியரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.