சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்…!!
Read Time:1 Minute, 11 Second
சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண்ணுக்கு நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனைக்கு எதிராக அதனை நிறுத்துமாறு கோரி இன்று மாலை மட்டக்களப்பு நகரில் பெருமளிவிலான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சூர்யா மகளிர் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கைப் பெண்ணுக்கு சவூதி அரசினால் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக் கெதிரான சுலோகங்கள் பலவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்ததுடன், துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
பெண்களின் வாழ்வு மற்றும் தொழில் செய்யும் உரிமைகளை சவூதி அரசு மறுக்கிறது.
ஆகவே இவற்றிற்கெதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
Average Rating