பாட்டியை குளியலறையில் அடைத்து வைத்திருந்த பேத்தி கைது..!!
Read Time:1 Minute, 10 Second
மலசலகூடத்திற்கு அருகில் குளியலறையொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் மீட்டியாகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை அவரது பேத்தியே இவ்வாறு அடைத்து வைத்திருந்துள்ளார்.
குறித்த பெண் 78 வயதானவர் எனவும் அவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவரது மகளே தனது பாட்டியை அடைத்து வைத்திருந்துள்ளார்.
தற்போது குறித்த பேத்தி கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் மற்றுமொரு மகளை அழைப்பை மேற்கொண்டு வரவழைத்த பொலிஸார், தாயை ஒழுங்காக பார்த்துக்கொள்ளவில்லையெனக் கூறி கைதுசெய்துள்ளனர்.
Average Rating