புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: “அதிரடி” நிருபர் உட்பட ஊடகவியாளர்களை, இன்று நேரடியாக மிரட்டிய சுவிஸ்குமார் மற்றும் பத்தாவது சந்தேகநபர்…!! (படங்கள் & வீடியோ)

Read Time:3 Minute, 39 Second

timthumb (1)கடந்த மே மாதம் 13ஆம் திகதி புங்குடுதீவில் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதன் தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றமை யாவரும் அறிந்ததே.

மேற்படி வழக்கின் நேற்றைய விசாரணையைத் தொடர்ந்து வழக்கு எதிர்வரும் 15.12.2015ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள அதேவேளை இன்றைய வழக்கு விசாரணையின் முடிவில் சந்தேகநபர்களை பொலிசார் மீண்டும் சிறைச்சாலைக்கு ஏற்றி செல்லும் நோக்கில் வாகனத்துக்கு அழைத்து வந்த போது, அவர்களை புகைப்படம், வீடியோ எடுத்த “அதிரடி” நிருபர்களில் ஒருவரை, வித்தியா கொலைச் சந்தேகநபர்களில் ஒருவரான சுவிஸ் குமார் என்பவர் மிரட்டும் தொனியில் நேரடியாகவே பேசி உள்ளார்.

“நீர் படங்கள், வீடியோ எடுத்து உங்களின் இணையங்களில் போடுவதுடன், பேஸ்புக்கிலும் போடுவது எமக்கு தெரியாதா?” “ஊர்,உலகத்தில் எவ்வளவோ பிரச்சினை இருக்கு? அதை எடுக்க மாட்டீர்கள்? இத மட்டும் விழுந்து, விழுந்து எடுங்கள்” என்று, மிரட்டும் தொனியில் சொன்னார்.

இதேவேளை இம்முறை முதல்முறையாக நீதிமன்றம் கொண்டு வரப்பட்ட பத்தாவது சந்தேகநபரென சந்தேகிக்கப்படுபவர் “வெளியில கமராவோட மாட்டீராதீங்க, மாட்டீனீங்க என்றால் சுடலை தான்” என்றதும்,

அதுக்கு அங்கிருந்த நிருபர் ஒருவர் “ஏன் நீங்களே வாங்கித் தந்தனீங்க?, புங்குடுதீவில் விட்ட சேட்டையை, எங்களிடம் விடாதீங்க” என்றார்.

இதுக்கும், “வாரமடா, எல்லோரையும் அடிப்பன்டா* என்றதுடன், “அதிரடி” நிருபரை நோக்கி, விரல்நீட்டி “பு…..யான்டிகள் சாவீங்கள்” என்று கொலைமிரட்டல் விடுத்தபடி சென்றார்.

மேற்படி சந்தேகநபர்களில் பத்தாவதாக ஒருவர் இன்றே முதல்முறையாக கைவிலங்குடன் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டு இருந்த போதும், இவர் குறித்து எதுவும் நீதிமன்றத்தில் பிரஸ்தாபிக்கப் படவில்லை.

***தொடர்புபட்ட செய்திகளுக்கு…
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: மரபணு ஆராய்ச்சி இன்னும் முடிவுக்கு வரவில்லையாம்..?!! http://www.athirady.com/tamil-news/news/700908.html

புங்குடுதீவு மாணவி வித்தியா தொடர்பில் கைதாகிய, ஒன்பது சந்தேகநபர்களுடன் சென்ற பத்தாவது சந்தேகநபர் என்பவர் யார்?? (“அதிரடி”யின் படங்கள்) http://www.athirady.com/tamil-news/news/701151.html

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: சந்தோஷத்தில் சென்ற சந்தேகநபர்கள்.., இதன் பின்னணி என்ன..?!! (சந்தேகநபர்களின் “அதிரடி”யின் படங்கள் & வீடியோ) http://www.athirady.com/tamil-news/news/700921.html

அதிரடிக்கு நன்றிகள்…

timthumb

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டு பெண்களை திருமணம் செய்யும் அதிர்ஷ்டக்கார இளைஞன்! (VIDEO)…!!
Next post வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்..!!