நத்தார் தாத்தா வேடமணிந்து ஹெலிகொப்டரை கடத்திய நபர்…!!
நத்தார் தாத்தா வேடமணிந்த நிலையில், ஹொலிகொப்டர் ஒன்றை திருடிச் சென்றதுடன் அதன் விமானியை பணயக் கைதியாக வைத்திருந்த ஒருவரை பிரேஸில் பொலிஸார் தேடி வருகின்றனர்.
மேற்படி நபர் சாவோ போலோ நகரிலுள்ள எயார் டெக்ஸி நிறுவனமொன்றில் ஹெலிகொப்டர் ஒன்றை வாடகைக்கு பெற்றிருந்தார்.
நத்தார் தாத்தா வேடமணிந்து ஹொலிகொப்டர் ஏறிய அந்நபர் மக்களுக்கு வியப்பூட்டும் நிகழ்வொன்றில் பங்குபற்றப் போவதாகக் கூறினார்.
ஆனால், ஹெலிகொப்டர் பறந்துகொண்டிருந்தபோது, ஹொலிகொப்டரை கடத்தும் அவரின் திட்டம் விமானிக்கு தெரியவந்தது.
ஹொலிகொப்டரை சாவோ போலோவுக்கு அருகிலுள்ள சிறிய பண்ணையொன்று கொண்டு செல்லுமாறு விமானியை அந்நபர் நிர்ப்பந்தித்தார்.
ஹெலிகொப்டர் தரையிறங்கியபின் அங்கு வந்த மற்றொரு நபருடன் இணைந்து விமானியை கட்டிப் போட்டுவிட்டு, ஹொலிகொப்டருடன் நத்தார் தாத்தாவும் மற்றைய நபரும் பறந்தனர்.
பல மணித்தியாலங்களின் பின்னர், விமானி தப்பிச் சென்று பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.
தற்போது அந்த ஹெலிகொப்டரையும் நத்தார் தாத்தா வேடத்திலிருந்தவரையும் பிரேஸில் பொலிஸார் தேடி வருகின்றனர்.
Average Rating