162 பேரை பலிகொண்ட ஏர் ஏசியா விமான விபத்துக்கு காரணம் என்ன? வெளியான புதிய தகவல்…!!
ஜாவா கடலில் கடந்த ஆண்டு ஏர் ஏசியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதற்கு விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் மற்றும் விமானிகளின் அலட்சியமே காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவின் சுரபையாவில் இருந்து சிங்கப்பூருக்கு கடந்த டிசம்பர் 28ஆம் திகதி ஏர் ஏசியா விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
இந்நிலையில் ஜாவா கடல் அருகே அந்த விமானம் விபத்துக்குள்ளதில் அதில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர்.
மோசமான வானிலை காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளானது என்று முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நொறுங்கிய பாகங்கள் மற்றும் விமானிகளின் அலட்சியம் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக இந்தோனேசியாவின் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
விமானத்தின் ரூடரை கட்டுப்படுத்தும் கருவியில் சேதம் ஏற்பட்டுத்துள்ளது.
இது தொடர்பாக விமானிகளுக்கு நான்கு முறை எச்சரிக்கையும் அனுப்பபட்டுள்ளது.
அதனை அவர்கள் சரி செய்ய முயன்றபோது விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்துள்ளனர்.
இதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating