வெள்ளப் பாதிப்புக்களை ஹெலிகாப்டர் மூலம் ஜெயலலிதா பார்வையிட்டார்..!!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் ஜெயலலிதா பார்வையிடுகிறார்.
சென்னை நகரிலும், சுற்று வட்டார பகுதிகளிலும் நேற்று முன்தினம் இடை விடாமல் கனமழை கொட்டியது.
இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
தரைப் போக்குவரத்து, ரயில் சேவைகள் மற்றும் விமான சேவைகள் என்பன முற்றிலுமாக பாதிக்ப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையம் எதிர்வறும் ஞாயிற்றுக்கிழமை வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார்.
இதனிடையே, மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரக்கோணம் விமானப்படை தளத்திற்க்கு வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக வெள்ள சேதங்களை பார்வையிடவுள்ளதாக கூறப்படுகிறது
Average Rating