இறந்தவர் மீண்டதால் பரபரப்பானது குருநகர் : வதந்தியால் இடம்பெற்ற விபரீதம்..!!
Read Time:1 Minute, 9 Second
சாவடைந்தவர் எனக்கூறப்பட்ட ஒருவர் உயிருடன் வந்த சம்பவம் கடந்த 29ஆம் திகதி குருநகரில் நடைபெற்றது.
ஆலயத் தொண்டில் ஈடுபட்டு வந்த 70 வயதுடைய முதியவர் ஒருவர், குருநகர் உத்தரியமாதா ஆலயத்தில் சடலமாகக் கிடக்கிறார் என வதந்தி காட்டுத்தீ போல குருநகர் பிரதேசம் எங்கும் பரவியது.
அவரது பிள்ளைகள் உறவினர் அனைவரும் அவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகத் கேள்விப்பட்டு வைத்தியசாலையை முற்றுகையிட்டனர்.
வேறு சிலர் அவரது இல்லம் சென்று துக்கம் விசாரித்தனர்.வீட்டில் இருந்தவர்கள் முதியவரின் சாவுச் செய்தி கேட்டு அழுது புலம்பிக் கொண்டிருக்க உயிரிழந்தவர் எனக் கூறப்பட்ட அவர் உயிருடன் வீட்டுக்கு வந்துள்ளார். அதனால் அங்கிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
Average Rating