புலிகளின் செய்மதி தொலைத்தொடர்பு நிலையமே கிளிநொச்சியில் அழிப்பு’
Read Time:1 Minute, 12 Second
கிளிநொச்சி தர்மபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விமானத்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் செய்மதி தொலைத்தொடர்பு நிலையமும் இணைப்பு அலுவலகமும் பலத்த சேதமடைந்ததாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகத் திரட்டப்பட்ட புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே புலிகளின் செய்மதித் தொலைத்தொடர்பு நிலையமும் இணைப்பு அலுவலகமும் தாக்கப்பட்டதாகவும் விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையத்தில் புலிகளின் தலைவர்கள் இரகசிய சந்திப்புகளை நடத்துவதும் அறியவந்ததாகவும் படையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு இலக்குகள் அழிக்கப்பட்டதாக விமானிகள் உறுதிப்படுத்துவதாகவும் விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.