புலிகளின் செய்மதி தொலைத்தொடர்பு நிலையமே கிளிநொச்சியில் அழிப்பு’

Read Time:1 Minute, 12 Second

aniltte1.gifகிளிநொச்சி தர்மபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விமானத்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் செய்மதி தொலைத்தொடர்பு நிலையமும் இணைப்பு அலுவலகமும் பலத்த சேதமடைந்ததாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகத் திரட்டப்பட்ட புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே புலிகளின் செய்மதித் தொலைத்தொடர்பு நிலையமும் இணைப்பு அலுவலகமும் தாக்கப்பட்டதாகவும் விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையத்தில் புலிகளின் தலைவர்கள் இரகசிய சந்திப்புகளை நடத்துவதும் அறியவந்ததாகவும் படையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு இலக்குகள் அழிக்கப்பட்டதாக விமானிகள் உறுதிப்படுத்துவதாகவும் விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக கலவரம்: செஸ் சாம்பியன் காஸ்பரோவ் உள்பட 300 பேர் கைது
Next post பாகிஸ்தான் பொதுத் தேர்தலை புறக்கணிக்கும் முடிவினை பெனாசிர் வாபஸ் பெற்றார்…!