தடபுடல் விருந்து
Read Time:58 Second
யானைகள் மட்டுமல்ல, குரங்குகளும் தாய்லாந்தில் பிறக்க அதிர்ஷ்டம் செய்திருக்கும் போலிருக்கிறது. யானைகளை அதிகளவில் பராமரிக்கும் தாய்லாந்து மக்கள், குரங்குகள் மீதும் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை லோப்புரி என்ற இடத்தில் குரங்குகளுக்கு சிறப்பு படையல் நடத்துகின்றனர். இந்த ஆண்டின் படையல் நிகழ்ச்சி நடந்தது. அதில் 2,000 கிலோ எடையில் பழங்கள், காய்கறிகள், குளிர்பானங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டன. அவற்றை வானரக் கூட்டம் முற்றுகையிட்டு விரும்பியதை தின்று தீர்த்தன. பழங்களை ஆர்வமாக இங்கே சில குரங்குகள் ருசிக்கின்றன.