யாழில் பெண்ணொருவர் தீக்குளித்து தற்கொலை; மண்வெட்டியால் தாக்கி மற்றொரு பெண் கொலை…!!
Read Time:1 Minute, 12 Second
யாழ்ப்பாணம், அரியாலை பிரதேசத்தில் பெண்ணொருவர் தனக்குத் தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்றிரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் 48 வயதுடைய பெண்ணொருவர் என்பதுடன், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிய வந்துள்ளது.
இதுதவிர தெஹியத்தகண்டி, தொலகந்த பிரதேசத்தில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு 35 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் உயிரிழந்த பெண்ணின் 09 வயதுடைய மகள் சிறுகாயங்களுடன் தெஹியத்தகண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்காக தெஹியத்தகண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating