கெய்ரோ இரவு விடுதியில் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல்: 16 பேர் பலி…!!
Read Time:1 Minute, 20 Second
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள பிரபல இரவு விடுதியின்மீது பெட்ரோல் குண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.
கெய்ரோவில் உள்ள அகோவ்ஸா பகுதியில் தரைதளத்துக்கு அடியில் பிரபல இரவு விடுதி ஒன்றுள்ளது. இந்த விடுதியின்மீது மோட்டார் சைக்கிளில்களில் வந்த சிலர் பாட்டில்களில் பெட்ரோல் அடைக்கப்பட்ட மாலோட்டோவ் ரக குண்டுகளை வீசினர். இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். காயமடைந்த பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் அதே இரவு விடுதியில் இருந்து சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவன் என்றும், இதனால் ஆத்திரமடைந்த அந்நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தியதாகவும் சில உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Average Rating