தனியார் மருத்துவமனையில் கைவலிக்கு சிகிச்சை பெற்றவர் பலியான பரிதாபம்: மகன் கதறல்…!!
Read Time:1 Minute, 11 Second
ஆஸ்பத்திரியில் பலியானவர்களில் புதுப்பேட்டையை சேர்ந்த பரஞ்ஜோதி (53) என்பவரும் ஒருவர். ராயப்பேட்டையில் உள்ள அவரது உடலை பார்த்து மகன் துர்க்க பிரகாஷ் கதறி அழுதார். அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:–
கடந்த செப்டம்பர் 4–ம் தேதி விழுப்புரம் அருகே நடந்த ரெயில் விபத்தில் எனது தாய் பரஞ்ஜோதியின் வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை.
இதையடுத்து சிறிய ஆபரேசன் செய்வதற்காக கடந்த 21–ந் தேதி இந்த ஆஸ்பத்திரியில் சேர்ந்தோம். ஆபரேசன் முடிந்து நன்றாக பேசிக் கொண்டு இருந்தார்.
இதற்குள் இந்த சோக சம்பவத்தில் தாய் இறந்து விட்டார். இந்த திடீர் இழப்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating