எகிப்தில் கேளிக்கை விடுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு; 16 பேர் சாவு..!!
எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு அருகில் உள்ள அகவுசா என்ற மாவட்டத்தில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது. இங்கு வழக்கம் போல நேற்று முன்தினம் தொடங்கிய விருந்து நிகழ்ச்சி ஆடல், பாடல், மது என விடியும் வரை தொடர்ந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நேற்று அதிகாலையில் அந்த பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் வந்த 3 நபர்கள் திடீரென அந்த கேளிக்கை விடுதிக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் கண் இமைக்கும் நேரத்தில் கேளிக்கை விடுதி முழுவதும் தீ பரவியது. உடனடியாக அனைவரும் உயிரை காத்துக்கொள்ள அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இதனால் அங்கு கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Average Rating