மகள் பாலியல் துஸ்பிரயோகம் : தலைமறைவாகிய தந்தை தற்கொலை..!!
புங்குடுதீவு பகுதியில் தனது மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தினார் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புங்குடுதீவு 8ஆம் வட்டாரம் மடத்துவெளி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய எஸ்.சிவரஞ்சன் என்ற குடும்பஸ்தர் தனது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தார் என ஊர்காவற்றுறை பொலிஸில் உறவினர்களாலேயே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
கடந்த சில தினங்களாக இவரை பொலிஸார் தேடிவந்த நிலையில் குறித்த நபர் தலைமறைவாகியிருந்தார். இந்த நிலையில் நேற்று குறித்த நபர் தனது வீட்டிற்கு வந்திருந்ததாகவும் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இந்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபரை பொலிஸார் தேடிச் சென்ற நிலையில் வீட்டுக்கு அருகில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றிற்குள் தூக்கிடப்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating