3ஆம் தவணையில் குறைவான புள்ளி : மாணவி தற்கொலை முயற்சி..!!

Read Time:1 Minute, 23 Second

download (1)பாடசாலை தவணைப்பரீட்சையில் குறைவான புள்ளி பெற்றதால் தனக்கு தானே தீமுட்டி எரிந்த சம்பவம் ஒன்று கோப்பாய் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

கோண்டாவில் மேற்கு கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 14 வயதான துசாகரன் லதுசாயினி என்ற சிறுமியே இவ்வாறு தீயிட்டுக்கொண்டார்.

குறித்த மாணவி இணுவில் மத்திய கல்லூரியில் கல்வி கற்று வருவதாகவும், நேற்றையதினம் 3ஆம் தவணை பாடசாலை விடுமுறையின் போது தவணைப் பரீட்சையில் குறைந்த புள்ளிகளை பெற்றதன் காரணமாக விரக்தியடைந்த சிறுமி தனக்கு தானே தீ மூட்டியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகள் பாலியல் துஸ்பிரயோகம் : தலைமறைவாகிய தந்தை தற்கொலை..!!
Next post சென்னைக்கான விமான சேவைகள் இரத்து..!!