வாழைப்பூ வடகம் சாப்பிடுங்கள்! பலனை பெறுங்கள்…!!

Read Time:2 Minute, 8 Second

vadagam_002-300x225-615x461வாழைப்பூவை உணவாக உட்கொண்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கொழுப்புத்தன்மை குறைந்துவிடும்.

மூல நோய்கள், இரத்தம் வெளியேறுதல், மலச்சிக்கல், சீதபேதி, வாய்ப்புண் போன்றவற்றிற்கு தீர்வு தரும்.

வாழைப்பூ வடகம்

தேவையானவை:

வாழைப்பூ – 4 மடல்கள், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – 2 சிட்டிகை, உப்பு -தேவையான அளவு.

செய்முறை

வாழைப்பூவில் உள்ள கள்ளனை ஆய்ந்து, பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். (இது வாழைப்பூ கருப்பதைத் தவிர்க்கும்). பருப்பு வகைகளை ஊறவைத்து, அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றவும்.

மிகவும் மையாக அரைக்கத் தேவை இல்லை. கடைசியாக வாழைப்பூவைப் பிழிந்து எடுத்து, இந்தக் கலவையுடன் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதை, சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளியோ, சிறிய அடையாகத் தட்டியோ வெயிலில் நன்கு உலர்த்திப் பத்திரப்படுத்தவும்.

இந்த வடகத்தை, எண்ணெயில் வறுத்துப் பயன்படுத்தலாம். காரக்குழம்புக்கு வறுத்தும் சேர்க்கலாம்.

பலன்கள்

மாதவிடாய்க் காலங்களில் அதிக ரத்தப்போக்கு மற்றும் மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்கும்.

அதிக ரத்தப்போக்கை (அது மூலமாக இருந்தால்கூட) நிறுத்த வல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிளகாய்த்தூள் தூவி 860000 ரூபா பெறுமதியான பணம் மீள் நிரப்பு அட்டைகள் கொள்ளை..!!
Next post வங்காளதேசத்தில் திருவிழா கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 6 பேர் காயம்…!!