ரயிலில் மோதுண்டு இளைஞர் உயிரிழப்பு – கொழும்பில் சம்பவம்..!!
Read Time:1 Minute, 6 Second
கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கோட்டை ரயில் நிலையத்திலிருந்து திருகோணமலை – மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த ரயில், மருதானையிலிருந்து கோட்டை ரயில் நிலையத்திற்கு பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் 20 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Average Rating