தற்கொலைப் படைத் தாக்குதலில் ஏமன் ஆளுநர் பலி: ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு..!!

Read Time:3 Minute, 6 Second

ddc59113-068e-4e92-85b7-0b81acdb14eb_S_secvpfஏமன் நாட்டு ஆளுநர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் 6 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

ஏமனில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஏடன் நகர கவர்னரும், அவரது மெய்க்காவலர்கள் 6 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.

அரபு நாடான ஏமன் நாட்டில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்கள் தலைநகர் சனா உள்பட நாட்டின் முக்கிய நகரங்கள் பலவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.

ஏமனின் இரண்டாவது பெரிய நகரமான ஏடனும் அவர்கள் வசம்தான் இருந்து வந்தது. ஆனால் அங்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிபர் ஆதரவு படைகளுடன் சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய நாடுகளின் கூட்டுப்படைகள் இணைந்து தாக்குதல் நடத்தி ஏடனை மீட்டன.

இந்த ஏடன் நகரத்தின் கவர்னராக ஜாபர் முகமது சாத் பதவி வகித்து வந்தார். நேற்று அவர் தனது அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் மெய்க்காவலர்களும் வாகனங்களில் பயணம் செய்தனர். அப்போது ரிம்பாவுத் என்ற இடத்தில் அவர்களது வாகனங்கள் வந்தபோது, வெடிகுண்டுகள் நிரப்பிய காரை தற்கொலைப்படை தீவிரவாதி, கவர்னரின் பாதுகாப்பு வாகனம் மீது மோதினார்.

இதில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி கவர்னர் ஜாபர் முகமது சாத்தும், அவரது மெய்க்காவலர்கள் 6 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அதிபர் மன்சூர் ஹாதி, சவுதி அரேபியாவுக்கு ஓட்டம் பிடித்தவர், கடந்த மாதம்தான் நாடு திரும்பினார். இந்த நிலையில் அங்கு நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், கவர்னரும், அவரது மெய்க்காவலர்களும் கொல்லப்பட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளனர். ஏமனில் பல்வேறு தீவிரவாதிகளுடன் ஐ.எஸ். தீவிரவாதிகளும் காலூன்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க மக்களிடையே உரையாற்றுகிறார் ஒபாமா…!!
Next post புரசைவாக்கத்தில் பழமையான 2 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது…!!