பொலிஸார் மீது உலக்கைத் தாக்குதல்..!!

Read Time:1 Minute, 23 Second

images (1)உங்கள் வீட்டுக்கருகில் எவ்வாறு கசிப்பு போத்தல்கள் வந்தது என்று வினவிய இரண்டு பொலிஸாரை உலக்கையால் தாக்கிய சம்பவம், வடமராட்சி, துன்னாலை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

துன்னாலைப் பகுதியில் கசிப்பு காய்ச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்வதற்காக, நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸார், குறித்த பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அங்கிருந்த வீடொன்றுக்கு அருகிலிருந்து 2 போத்தல் கசிப்பை மீட்ட பொலிஸார், வீட்டுக்காரர்களை அழைத்து இந்தக் கசிப்பு எவ்வாறு உங்கள் வீட்டுக்கு அருகில் வந்தது என்று வினவியுள்ளனர்.

இந்தக் கேள்வியைக் கேட்டு ஆத்திரங்கொண்ட வீட்டுக்காரர், இரு பொலிஸார் மீதும் உலக்கையால் தாக்கியுள்ளதாக தெரிவித்த நெல்லியடி பொலிஸார், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவு மோகம் உறவுகளை சிதைக்கும்…!!
Next post வீடொன்றுக்குள் புகுந்து நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் மூவர் காயம்..!!