தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வர்த்தகரின் சடலம்; இளைஞர்கள் கொல்லப்பட்ட இடத்தில் தலை மீட்பு…!!

Read Time:3 Minute, 35 Second

13607136_newsthumb_deathஎல்­பிட்­டிய ஊறு­கஸ்­மங்­ஹந்­திய பிர­தே­சத்தில் தலை துண்­டிக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்ட நபர் ஒரு­வரின் சட­லத்தை பொலிஸார் மீட்­டுள்­ளனர்.

இவ்­வாறு தலை துண்­டிக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்டவர் இஹ­ல­மா­ல­வலரந்­தொ­டு­வல பிர­தே­சத்தை சேர்ந்த சரத்­கு­மார என்ற 39 வய­தான மணல் வர்த்­தகர் ஒருவர் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

மேற்­படி நப­ருக்கு சொந்­த­மான வர்த்த நிலை­யத்­துக்கு அரு­கி­லி­ருந்து அவரின் தலை­யற்ற முண்­டப்­ப­குதி கடந்த வெள்­ளிக்­கி­ழமை மீட்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் அவரின் தலை சனிக்­கி­ழமை அதி­காலை மீட்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த பிர­தே­சத்தில் இரு தரப்­பி­ன­ரி­டையே நீண்ட கால­மாக நிலவி வந்­தி­ருந்த விரோதம் ஒன்றே இக்கொலைக்­கான கார­ண­மென பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

கொலை செய்­யப்­பட்ட நபரின் தலைப்பகுதி கிடைக்கப் பெற்ற இடத்­தி­லேயே கடந்த மாதம் 3ஆம் திகதி துப்­பாக்கி சூட்டு சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றி­ருந்­தது.

இச்­சம்­ப­வத்தில் மோட்டார் சைக்­கிளில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த 23 மற்றும் 24 வய­து­டைய இளை­ஞர்கள் இருவர் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர்.

மேலும் நவம்பர் 3 ஆம் திகதி காலை 9.15 மணி­ய­ளவில் ஊறு­கஸ்­மங்­ஹந்­திய – ரன்­தொ­டு­வில பிர­தே­சத்தில் மோட்டார் சைக்­கிளிள் பய­ணித்துக் கொண்­டி­ருந்த இளை­ஞர்கள் இருவர் மீது இனந்­தெ­ரி­யாத இருவர் துப்­பாக்கி சூடு நடத்­தி­விட்டு தப்பிச் சென்­றி­ருந்­தனர்.

சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்த இளை­ஞர்கள் ஊறு­கஸ்­மங்­ஹந்­திய பிர­தே­சத்தை சேர்ந்­த­வர்கள் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முன் விரோதம் ஒன்றின் விளை­வா­லேயே மேற்­படி இளை­ஞர்கள் துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்டு கொலை செய்­யப்­பட்­ட­தா­கவும் இவ்­வாறு துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்­ட­வர்கள் அதே பிர­தே­சத்தை சேர்ந்­த­வர்கள் என சம்­பவம் இடம்­பெற்ற வேளையில் பொலிஸார் தெரி­வித்­தி­ருந்­தனர்.

உயி­ரி­ழந்த இளை­ஞர்கள் இரு­வரும் அவர்­க­ளது வீட்­டி­லி­ருந்து 100 மீற்றர் தூரத்தில் மோட்டார் சைக்­கிளிள் பய­ணித்துக் கொண்­டி­ருந்த வேளையில் துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்டு கொல்லப்­பட்­டனர்.

மேற்படி துப்பாக்கிச் சூடு மற்றும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை சம்பவம் ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவா? என கண்டறியும் பொருட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 7 நாட்களில் உடல் சக்தியை அதிகரிக்க சில எளிய வழிகள்…!!
Next post தாய்மையின் வலி: சேற்றில் சிக்கிய குட்டியை போராடி மீட்ட யானை: வைரல் வீடியோ..!!