நடுவானில் பறந்த போது விமானத்தின் கதவை திறக்க முயன்றவர் கைது…!!
Read Time:1 Minute, 11 Second
ஜெர்மனியின் பிராங் பாட்டில் இருந்து செர்பியா தலைநகர் பெல்கிரேடுக்கு லுப்தான்சியா நிறுவன பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானம் ஆஸ்திரியா நாட்டின் மீது நடுவானில் பறந்து கொண்டிருந்தது.
அப்போது அதில் பயணம் செய்த ஒருவர் விமானத்தை தரை இறக்க வலியுறுத்தி விமானியின் கதவை பலமாக தட்டினார். ஆனால் இதை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. உடனே விமானத்தின் கதவை திறக்க முயன்றார். அவரை விமான ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதற்கிடையே அந்த விமானம் பெல்கிரேடில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. அதை தொடர்ந்து விமானத்தின் கதவை திறக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஜோர்டானை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவர் அமெரிக்க பாஸ்போட் வைத்திருந்தார்.
Average Rating