பாரீசை தொடர்ந்து இங்கிலாந்துக்கு தீவிரவாதிகள் மிரட்டல்…!!

Read Time:1 Minute, 46 Second

eb1bf3a2-a019-4e4a-8c9b-30aa7c11c4be_S_secvpfகடந்த மாதம் (நவம்பர்) 13–ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி 130 பேரை கொன்று குவித்தனர். அதை தொடர்ந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது இங்கிலாந்தும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

அதற்கான ஒப்புதலை பாராளுமன்றத்தில் பிரதமர் கேமரூன் பெற்றார். இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் இங்கிலாந்துக்கும் தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் சார்பில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் பேசும் ஒரு தீவிரவாதி எங்கள் இயக்கத்துக்கு எதிராக செயல்படும் நாடுகள் சிரியா மற்றும் ஈராக்கை விட்டு வெளியேறி விடுங்கள்.

எங்களது துப்பாக்கிகள், குண்டுகள் மற்றும் வெடி பொருட்களால் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் பாரீசை தொடர்ந்து இங்கிலாந்து மீது தற்கொலை தாக்குதல் நடத்தி பழிவாங்குவோம் என தெரிவித்தான்.

அவன் ஆங்கிலத்தில் பேசினான். அதற்கு முன்னோட்டமாக 400 தீவிரவாதிகள் இங்கிலாந்துக்குள் ஊடுருவி இருப்பதாக ஐரோப்பிய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுவானில் பறந்த போது விமானத்தின் கதவை திறக்க முயன்றவர் கைது…!!
Next post பு.புளியம்பட்டி அருகே கடைக்குள் கார் புகுந்தது: கணவன்–மனைவி படுகாயம்…!!