இலங்கை கடற்பகுதியில் மிதப்பது சென்னை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களா..!!
Read Time:1 Minute, 16 Second
இலங்கையின் திருகோணமலை கடல் பகுதியில் சில உடல்கள் மிதப்பதாகவும் அவை சென்னை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களாக இருக்க கூடும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை கடலில் 6 சடலங்கள் மிதப்பதாக திருகோணமலை மீனவர்கள் காவல்துறையினரிடம் தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து இலங்கை கடற்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது ஒரு ஆண் சடலத்தை கண்டுபிடித்தனர். அந்த ஆணின் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட அடையாள அட்டை, சென்னையை சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநரின் அடையாள அட்டை எனத் தெரிய வந்தது.
இலங்கை கடற்பகுதியில் மேலும் சடலங்கள் மிதக்கின்றனவா? என இரண்டாவது நாளாக அந்நாட்டு கடற்படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடல்கள் இலங்கையில் கரை ஒதுங்கியது அங்கு பரப்பரபை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating