நீரில் மூழ்கி 4 குழந்தைகள் பலி

Read Time:1 Minute, 22 Second

baby067.gifமத்திய பிரதேச மாநிலத்தில் மொகானி என்ற கிராமத்தில் 3 சிறுமிகள் உட்பட நான்கு குழந்தைகள் தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்வாதி (வயது 13) அவரது சகோதரி நந்தினி (வயது 11), சகோதரர் பேடிலால் (வயது 9) மற்றும் கல்பனா (வயது 12) ஆகியோரது உடல்களை கிராம மக்கள் பள்ளத்திலிருந்து மீட்டனர். சட்ட விரோதமாக இந்த பள்ளங்கள் அந்த பகுதியில் தோண்டப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டிய கிராம மக்கள் காவல் நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்ட விரோதமாக பள்ளங்களை தோண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனிடையே உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு உள்ளூர் நிர்வாகம் சார்பில் தலா 5 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 50 லட்சம் நஷ்ட ஈடு கொடு -தனுஷ் படத்தயாரிப்பாளர் மீது வழக்கு
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…