மதுரையில் என்ஜினீயரிங் மாணவர் தீக்குளித்து தற்கொலை..!!
Read Time:1 Minute, 9 Second
மதுரை டவுன்ஹால் ரோடு, தலைவிரிச்சான் சந்து பகுதியை சேர்ந்தவர் மருதநாயகம். மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் துரை விசுவநாதன் (வயது 20).
சென்னையில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் 3–ம் ஆண்டு படித்து வந்தார். சென்னையில் மழை வெள்ள பாதிப்பால் பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை விடப்பட்டது.
இதைத் தொடர்ந்து துரை விசுவநாதன் சில தினங்களுக்கு முன்பு மதுரை வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
இதுகுறித்து திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating