தற்கொலை நோக்குடன் 7 ஆவது மாடியிலிருந்து குதித்த பெண் உயிர் தப்பினார் ; கீழேயிருந்த முதியவர் உயிரிழப்பு…!!
தற்கொலை செய்துகொள்ளும் நோக்குடன் 7 ஆவது மாடியிலிருந்து குதித்த பெண்ணொருவர் உயிர் தப்பிய போதிலும் அப்பெண் கீழே வீழ்ந்தபோது அவரால் மோதப்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஸ்பெய்னின் அலிகென்ட் நகருக்கு அருகில் கடந்த புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
48 வயதான பெண்ணொருவர் தற்கொலை செய்துகொள்வதற்காக குடியிருப்புத் தொகுதியொன்றின் 7 ஆவது மாடியிலிருந்து குதித்தார்.
இதன்போது, அக்கட்டடத்திற்கு வெளியில் கதிரையொன்றில் தனது மனைவியுடன் அமர்ந்திருந்த 81 வயதான முதியவர் ஒருவர் மீது அப்பெண் வீழ்ந்தார்.
இதனால் மேற்படி முதியவர் உயிரிழந்தார். 7 ஆவது மாடியிலிருந்து குதித்த பெண், படுகாயமடைந்த நிலையில் சான் ஜோன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பெண் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தவர் எனக் கூறப்படுகிறது.
உயிரிழந்த நபரின் 85 வயதான மனைவியும் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு அதே வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
Average Rating