காற்றினால் இழுத்துச் செல்லப்பட்ட நபர் பஸ்ஸின் அடியில் வீழ்ந்ததால் உயிரிழந்தார்…!!

Read Time:1 Minute, 30 Second

1364918நபர் ஒருவர் காற்றினால் இழுத்துச் செல்லப்பட்டு பஸ்ஸின் அடிப்பகுதிக்குள் வீசப்பட்டதால் உயிரிந்த சம்பவம் லண்டனில் இடம்பெற் றுள்ளது.

லண்டன் வட பகுதியில் கடந்த சனிக்கிழமை இச்சம்பவத்தில், 90 வயதான ஆண் ஒருவரே திடீரென காற்றினால் இழுத்துச்செல்லப்பட்டு ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸின் அடியில் வீழ்ந்தார்.

அவர் மீது பஸ்ஸின் சக்கரங்கள் ஏறியதால் அந்நபர் படுகாயமடைந்தார். அவரை காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள் சுமார் 45 நிமிடங்கள் போராடிய போதிலும் அவர் உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

லண்டன் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் இது தொடர்பாக கூறுகையில்,
நபர் ஒருவர் காற்றினால் இழுத்துச் செல்லப்பட்டு, பஸ்ஸின் அடிப்புறத்தில் வீழ்ந்ததால் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித் துள்ளார்.

பிரிட்டனின் பல பகுதிகளில் டெஸ்மன்ட் புயல் தாக்கிய வேளையில் மேற்படி சம்பவம் இடம் பெற்றமை குறிப்பிடத் தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தற்கொலை நோக்குடன் 7 ஆவது மாடியிலிருந்து குதித்த பெண் உயிர் தப்பினார் ; கீழேயிருந்த முதியவர் உயிரிழப்பு…!!
Next post ஆஸ்திரிய நதியில் மிதந்துவந்த 1.5 கோடி ரூபா பணம்…!!