கோயம்பேடு அருகே மீன் திருடிய வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த வியாபாரி…!!
Read Time:1 Minute, 21 Second
கோயம்பேடு நெற்குன்றம் பகுதி சி.டி.என். நகரில் மீன்கடை வைத்து உள்ளவர் கலியமூர்த்தி. இன்று காலை இவர் கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் கடையில் இருந்து மீனை திருடிக் கொண்டு ஓடினார். கலியமூர்த்தி கூச்சல் போடவே அங்கிருந்தவர்கள் திருடிய வாலிபரை விரட்டி பிடித்தனர்.
பிடிபட்ட வாலிபர் பெயர் ஜோகிர் என்றும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பிடிபட்ட அவனை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.
இதனால் ஆவேசம் அடைந்த வாலிபர் தனது கையில் இருந்த பேனாவால் கலியமூர்த்தி கண்ணை குத்தினார்.
இதில் அவரது வலது கண்ணில் இருந்து ரத்தம் கொட்டியது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வாலிபர் ஜோகிரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating