எடப்பாடி அருகே மினி ஆட்டோ மோதி கணவன்–மனைவி பலி…!!

Read Time:2 Minute, 19 Second

fae65ca1-a368-4270-b789-d35ddc8fab39_S_secvpfசேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த நெடுங்குளம் அருகே உள்ள சிலுவம்பாளையம் 4 –ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 64). இவரது மனைவி ராஜம்மாள் (55)

இவர்கள் இருவரும் இன்று காலையில் சொந்த வேலையின் காரணமாக எடப்பாடிக்கு செல்வதற்காக கோனேரிப்பட்டி– எடப்பாடி சாலையில் மொபட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, வெள்ளரி வெள்ளி ஏரிக்கரை பகுதியில் அவர்கள் வந்தபோது எதிரே வந்த மினி ஆட்டோ எதிர்பாராதவிதமாக முத்துசாமியின் மொபட்டின் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில், இருவரும் மொபட்டில் இருந்து தூக்கிவீசப்பட்டனர். மினி ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் விபத்தை கண்டதும், ஆட்டோவை நிறுத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

விபத்து நடந்த இடத்தில் அழுகூரல் சத்தத்தை கேட்டதும் அந்த வழியாக சென்றவர்களும், அந்த பகுதியை சேர்ந்தவர்களும் முத்துசாமி, ராஜம்மாள் ஆகிய இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலத்த காயம் அடைந்த முத்துசாமி செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். எடப்பாடி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ராஜம்மாள் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பூலாம்பட்டி போலீசார், விபத்துக்கு காரணமான மினி ஆட்டோவை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசிரியையுடன் மாயமா?: 10–ம் வகுப்பு மாணவர் சென்னையில் பதுங்கல்…!!
Next post ஐ.சி.எப்–ல் ரெயில்வே அதிகாரி அலுவலகத்தில் பயிற்சி மாணவர் தீக்குளிப்பு…!!