தூத்துக்குடியில் 8 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை…!!
தூத்துக்குடி தெற்கு கல்மேடு பகுதியை சேர்ந்தவர் சோனியாகாந்தி (வயது23). இவருக்கும் அருப்புக்கோட்டையை சேர்ந்த மொட்டை சாமி என்பவருக்கும் கடந்த 1.4.2015 அன்று திருமணம் நடைபெற்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொட்டை சாமி தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து விட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் 8 மாத கர்ப்பிணியான சோனியாகாந்தி தனது மாமனார்–மாமியாரிடம் கணவர் அடகு வைத்த நகைகளை மீட்டு தரும்படி கூறியுள்ளார்.
அப்போது சோனியா காந்தியை அவரது மாமனார்–மாமியார் கொடுமை செய்து அவதூறாக பேசியுள்ளனர். இதனால் சோனியாகாந்தி கோபித்து கொண்டு தூத்துக்குடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்த சோனியா காந்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தருவைகுளம் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சோனியாகாந்தி தனது மாமனார்–மாமியார் கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
Average Rating