திருவண்ணாமலையில் அமெரிக்க சிறுமியை கற்பழிக்க முயற்சி: வாலிபர் கைது…!!

Read Time:1 Minute, 36 Second

54f6a1c1-684e-4836-ae4b-8055be7a48c4_S_secvpfஅமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்ட்ரா (46). இவர் தனது 8 வயது மகளுடன் கடந்த 14–ந்தேதி திருவண்ணாமலைக்கு சுற்றுலா வந்தார். செங்கம் ரோட்டில் உள்ள பெரும்பாக்கம் என்ற இடத்தில் உள்ள தனியார் விடுதியில் தாயும், மகளும் தங்கினர். சம்பவத்தன்று அலெக்சாண்ட்ரா வெளியே சென்றிருந்தார். அவரது மகள் மட்டும் விடுதி அறையில் தனியாக இருநதார்.

அப்போது தானிப்பாடி ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த வினோத் (19) என்பவர் அறைக்குள் புகுந்தார். அவர் சிறுமியை கட்டி பிடித்து கற்பழிக்க முயற்சி செய்தார். திடுக்கிட்ட சிறுமி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் வினோத் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இது பற்றி அலெக்சாண்ட்ரா திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.

சுற்றுலா வந்த அமெரிக்க சிறுமியை கற்பழிக்க முயன்ற சம்பவம் திருவணணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூத்துக்குடியில் 8 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை…!!
Next post தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது (அ)நியாயமா?… -தமிழ் மைந்தன்…!!