கடத்தப்பட்ட பெண் தினசரி 10 முறைக்கு மேல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட கொடூரம்..!!
பெண்ணொருவர் , வெவ்வேறு ஆண்களால் தினசரி 10 முறைக்கு மேல் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட கொடூர சம்பவமொன்று டெல்லியில் இடம்பெற்றுள்ளது.
தற்போது அப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தெரியவருவது;
டெல்லியின் குரு தெக் பக்தூர் மருத்துவமனையில் ஒரு இளம் பெண் உடல் முழுவது காயங்களுடன் நோய் தொற்றுடனும் சேர்க்கப்பட்டார். அவரது வாயை சுற்றிலும் வெட்டுகாயங்களாக இருந்தது.அவரது கால்கள் மீது உள்ள காயங்களில் நோய் தொற்று காணபட்டுள்ளது.
தொடர் பாலியல் பலாத்காரத்தால் அந்த பெண் நோய் தொற்று அடைந்து உள்ளதாக மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.
இந்த பெண் விபசாரத்துக்காக கடந்த வருடம் மேற்கு வங்காளத்தில் இருந்து கடத்த்பட்டு உள்ளார் பின்னர் ரிஷிகேஷ், மணாலி, ஹரித்துவார்,மங்களூரு உள்பட பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பின்னர் அவர் டெல்லி கொண்டு வரப்பட்டு உள்ளார்.
தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சக்தி வாஹினி ரவிகண்ட் அந்த பெண்ணை கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்து உள்ளார்.அப்போது தான் அவர் கடத்தப்பட்ட விவரம் தெரியவந்து உள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் இந்துஸ்தான் டைம்சுக்கு அளித்த பேட்டியில் நான் ரிஷிகேஷ், ஹரித்வார், மணாலி., மங்களூர் உள்பட பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லபட்டேன். அங்கு பலர் என்னை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். கடந்த 6 மாதங்களில் நான் மறுத்த போது என்னை கடத்தியவர்கள் என்னை அடித்து துன்புறுத்தினர் என கூறியுள்ளார்.
உறவினர் என கூறி கொண்ட ஒரு மனிதரால் அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அந்த பெண்ணின் உடல் நிலை மோசமடைய தொடங்கியதும் அந்த மனிதன் தலைமறைவாகி விட்டார் என மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
Average Rating