ஆமைகளுக்காக தனியான சுரங்கப்பாதை…!!
ஜப்பானில், ரயில்களில் ஆமைகள் மோதப்படுவதை தடுப்பதற்காக ஆமைகளுக்காக தனியான சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வெஸ்ட் ஜப்பான் ரயில்வே கம்பனி எனும் நிறுவனம், கோபே நகரிலுள்ள சுமா நீரியல் பூங்காவுடன் இணைந்த இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
ரயில் பாதைகளை கடந்து செல்ல முற்படும் ஆமைகள் ரயில்களால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளன.
அதையடுத்து ஆமைகளை பாதுகாப்பதற்காக அவற்றுக்கென தனியான சுரங்கப்பாதை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமா நீரியல் பூங்காவை பார்வையிடுவதற்கு வருடாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர்.
கடற்கரையிலிருந்து சிறிது தூரத்திலேயே இப்பூங்கா அமைந்துள்ளது.
இந்நிலையில் ரயில் கடவைகளை கடந்து செல்ல முற்படும் ஆமைகள் ரயில்களில் அடிபடுகின்றன.
குறிப்பாக, மே முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் அதிக எண்ணிக்கையான ஆமைகள் இந்த ரயில்பாதையை கடந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating